Wednesday, 12 April 2017

 கேட்டது நிவாரணம் கிடைத்தது நிர்வாணம் 

 



நிவாரணம் கேட்டு நிதானம் காத்து நித்தமும் குலைந்து நித்திரை தொலைத்தோம் வறண்டுபோன பூமியில் வாழ்வாதாரம் போச்சு வாழ்வளித்த நிலமெல்லாம் வட்டிக்காரனுக்கு சொந்தமாச்சு விளைந்தபொருளெல்லாம் விலையேற்றமின்றி விலைநிலமெல்லாம் வியாபாரமா போச்சு விவசாயி வீழ்ந்தாலும் விவசாயம் வீழலாமா ? விவசாயக்கடன் தள்ளுபடி விரயமென சொல்லலாமா ! மாநிலத்திடம் மன்றாடியும் மத்தியத்திடம் மானமிழந்தும் மதிப்பில்லையே இனி என்ன செய்ய?