Saturday, 26 November 2016



பிடல் காஸ்ட்ரோ என்ற ஒரு பெயர் அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது என்றால் மிகையாகாது.

1959 ல் கியூபாவில் அதிகாரத்தை எடுத்து
அடிமை தளத்தை விளக்கினாய்
கம்யூனிசத்தை கையில் எடுத்து
பொதுவுடைமையை போதித்தாய்

ஏகாதிபத்தியத்தின் சொத்துகளையெல்லாம்
அரசுடைமை ஆக்கினாய் - தான்
ஏற்று கொண்ட கொள்கையெல்லாம்
ஒன்றொன்றாய் செய்து காட்டினாய்

சுயமரியாதையும் , சமதர்மத்தையும்
மக்களின் மத்தியில் விதைத்தாய் - நீ
638 முறை அமெரிக்காவின் கொலை
வெறியிலிருந்து  உயிர் பிழைத்தாய்

சே குவரே துணைகொண்டு நாட்டை
செல்வச்செழிப்பாய் மாற்றினாய் - உன்
தாடியையும், சுருட்டையும் கொண்டே 
உலக மக்களையெல்லாம் வசீகரித்தாய்

புரட்சியாளனாய் உலகத்திற்கு தெரிகிறாய்  
இன்று இயற்கையின் விருப்பத்தினால்
மண்ணுலகை விட்டே பிரிகிறாய்....!!!!!!!!!


"தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்  "
                                               - பிடல் காஸ்ட்ரோ