Monday, 12 September 2016

     சாதிக்குள்ளே  சாதி

Image result for periyar photos

சுயமரியாதை இயக்கம் கண்ட மண்ணாம் - தமிழகம்  
பகுத்தறிவு பதிந்த பகலவன் பிறந்த நாடாம் - தமிழ்நாடு 
இன்று சாதிச்சண்டை போடுவதிலே இரண்டாமிடமாம் - இந்தியாவிலேயே பெரியார் , அண்ணா பிறந்த தேசமாம் அங்கே !!!!!
எம்மக்களிடம் இருந்த நேசம் தான் எங்கே ???????????

ஊரெல்லாம் வீதியாம்  , வீதியெல்லாம் சாதியாம்  
சாதிக்குள்ளே சாதியாம் , அச்சாதிக்குள்ளயே எல்லாமாம் 
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தவன்  இன்று - சாதிக்கு 
சங்கம் வைத்து போற்றுகிறானே - சாதிகள் இல்லையடி பாப்பா என்று  சொன்ன பாரதியை எங்கள் சாதிக்காரன் என்கிறானே !!!!!

பெண்ணை போற்றி வளர்த்த திருநாடாம் அன்று 
காதலிக்கவில்லயென வெட்டிக்கொள்ளும் ஆணவநாடாம் இன்று 
இறந்தவளை பெண்ணென எவரும் பார்க்கவில்லயே - ஆனால் 
அவள் என்ன சாதி என வினவ மறக்கவில்லயே !!!!!

சாதியால் சத்துணவும் இல்லை , மதத்தால் மதியவுணவும் இல்லை 
இரண்டால் இரவுணவும் இல்லை, உழைப்பில்லையேல்  உயர்வில்லை ஏனோ பலரின் மனமோ இதை ஏற்பதில்லை !!!!!!!!!!

No comments:

Post a Comment